"விலங்குகள் மையத்தில் புகைப்படம், வீடியோ எடுக்க வேண்டாம்" - மணவிழாவிற்கு வரும் விருந்தினர்களுக்கு ஆனந்த் அம்பானி,ராதிகா மெர்ச்சண்ட் வேண்டுகோள்

0 412

குஜராத்தின் ஜாம்நகரில் திருமண விழாவிற்கு வரும் விருந்தினர்கள், ரிலையன்ஸ் நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் உள்ள விலங்குகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என மணமக்களான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விலங்குகள் நல ஆர்வலரான ஆனந்த் அம்பானி, வன்டாரா என்ற பெயரில் நடத்தும் மையத்தில் யானைகள், சிங்கங்கள், சிறுத்தைகள், முதலைகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன.

அந்த மையத்தை பார்வையிட அழைத்துச் செல்லப்படும் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட சிற்றுண்டி பெட்டியில் இருந்த கையேட்டில், பாதுகாப்பு கருதி விலங்குகளை புகைப்படம், வீடியோ எடுக்க வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments